கருவறையும்
கல்லறையும்
பாதுகாப்பானது என்ற
காலம்
கடந்த காலம்
இந்தக் காலம்
கருவறைக் கழுவலும்
கல்லறைக் களவும்
கண்டு பிடிக்கப்பட்ட
கலிகாலம்.
கல்லடி பட்டு
காயம் படாமல்
கனிந்தேன்
அறியாமையால்
பிழை செய்கிறார்கள்
என்று.
கடலில் அலை
கரையில் கடலை
காதலர்கள்.
கவிதை கேட்கின்றாயே
தேவி
நான் என்ன
கனவுகள் விற்பவனா ?
கவிதைகள் என்
காதலின் வெளிப்பாடு
கண்ணே என்
கண்களும்
காதல் சொல்லும்
கவிதை போல்
கவனித்துப் பார் என்
காதல்
கவிதையில் மட்டுமில்லை
என்பது புரியும் .
தனித்திரு
தவமிரு
தன்னையறி
தரணி ஆள் .
சாமானியர்கள்
சாகும் வரம் பெற்றவர்கள்
எதற்கும் சளைக்காதவர்கள்
உலகை ஆளப்பிறந்தோர்
உறங்கிக் கிடைப்பதில்லை.
தெரியும் என்பதால்
நாக்கைத் தொங்கப் போடும்
மடமாந்தர் மத்தியில்
சாவித்துவாரமும்
தனிமை மறுக்கும்.