My Hit Status


View My Stats

Thursday, June 9, 2011

கலிகாலம்.

கருவறையும் 
கல்லறையும் 
பாதுகாப்பானது  என்ற 
காலம் 
கடந்த காலம் 
இந்தக் காலம் 
கருவறைக் கழுவலும் 
கல்லறைக் களவும் 
கண்டு பிடிக்கப்பட்ட 
கலிகாலம்.

Wednesday, June 8, 2011

கனி

 கல்லடி பட்டு 
காயம் படாமல்
கனிந்தேன்
அறியாமையால் 
பிழை செய்கிறார்கள் 
என்று.

Friday, April 15, 2011

கடலில் அலை
கரையில் கடலை 
காதலர்கள். 

Monday, October 4, 2010

காதல் கவிதை

கவிதை கேட்கின்றாயே
தேவி 
நான் என்ன 
கனவுகள் விற்பவனா ?
கவிதைகள் என் 
காதலின் வெளிப்பாடு 
கண்ணே என் 
கண்களும் 
காதல் சொல்லும் 
கவிதை போல் 
கவனித்துப் பார் என் 
காதல்
 கவிதையில் மட்டுமில்லை 
என்பது புரியும் .

Sunday, August 15, 2010

தனிமைத் தவம்

தனித்திரு 
தவமிரு 
தன்னையறி 
தரணி ஆள் .

உறக்கம்

சாமானியர்கள் 
சாகும் வரம் பெற்றவர்கள் 
எதற்கும் சளைக்காதவர்கள்
உலகை ஆளப்பிறந்தோர்
உறங்கிக் கிடைப்பதில்லை. 

தனிமை

தெரியும் என்பதால் 
நாக்கைத் தொங்கப் போடும் 
மடமாந்தர் மத்தியில்
சாவித்துவாரமும் 
தனிமை மறுக்கும்.