My Hit Status


View My Stats

Sunday, August 15, 2010

தனிமைத் தவம்

தனித்திரு 
தவமிரு 
தன்னையறி 
தரணி ஆள் .

உறக்கம்

சாமானியர்கள் 
சாகும் வரம் பெற்றவர்கள் 
எதற்கும் சளைக்காதவர்கள்
உலகை ஆளப்பிறந்தோர்
உறங்கிக் கிடைப்பதில்லை. 

தனிமை

தெரியும் என்பதால் 
நாக்கைத் தொங்கப் போடும் 
மடமாந்தர் மத்தியில்
சாவித்துவாரமும் 
தனிமை மறுக்கும்.

மொழி

என் மொழி தெரியாதவர்க்கு 
என்னை எப்படி தெரியும்  
புலம்பாமல் புதிய மொழி
படிப்பது நானா? 
அவர்களா?

தேடல்

காலையிலும் தேடுகிறேன்
மாலையிலும் தேடுகிறேன்
கதைக் கட்டுரையிலும்
காணவில்லை
என்னுள் இருப்பது 
கண்ணாடியில் தெரியுமா .

கவிதைஉள்ளம்

கவிதை எழுதுவேன் 
என்றேன் .
கதைக்காதே 
காண்பிக்க வேண்டும் 
என்றார்கள். 
வர்ர்தைகளே 
கவிதை
என்று
வாழும் இவர்களுக்கு
கவிதைஉள்ளம்
எப்படிப் 
புரியும். 

Tuesday, August 10, 2010

என் கவிதைகள்

பொற்காசுத்
தலைப்புகளின் 
தவிப்பல்ல 
என் கவிதைகள்.
என் நிகழ்காலத் 
தட்ப வெப்பத்தின் 
தரிசனங்கள்.
அன்றைய 
அறிவிப்புகளாய் 
அழிந்திட 
தேதியிடப் படாமல் 
அன்றைய 
நிகழ்வுகளாய் 
வாசிக்கப்படும் 
வரலாற்றுப் 
பதிப்புகள்.